முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து மாடுகளை வெலிஓயா ஊடாக திருகோணமலைக்கு கொண்டு செல்லும் முயற்சிக்கு உதவிய பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவரையும் மாடுகளை ஏற்றிய வாகனத்தையும் முள்ளிவளை பொலீஸார் கைதுசெய்துள்ளார்கள்.
இரண்டு குற்றவாளிகள் தப்பி ஓடியுள்ளாதாக முள்ளிவளை பொலீஸார் தெரிவித்துள்ளார்கள்.
இச்சம்பவம் குறித்து முள்ளியவளை பொலீஸார் மேலும் தெரிவிக்கையில் நேற்று இரவு முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவளை மற்றும் ஏனைய பகுதிகளில் இருந்து மாடுகள் கடத்தப்படுவதாக தகவல் கிடைக்கப்பெற்றது,
புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவரின் உதவியுடன் 5 மாடுகளை ஏற்றிச் சென்ற இருவர் பயணித்த வாகனத்தை கொக்கிளாய் பகுதியில் வைத்து நேற்று இரவு 11.00 மணியளவில் பொலிஸார் மறித்துள்ளார்கள்.
இதன்போது குறித்த வாகனம் நிக்காமல் சென்றுள்ளது வாகனத்தில் சில்லுக்கு துப்பாக்கி சூடு நடத்தி வாகனத்தை நிறுத்தியுள்ளதுடன் அதில் இருந்த இருவரும் தப்பி சென்றுள்ளார்கள்.
இந்த மாடு கடத்தலுக்கு துணைபுரிந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரும் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவரை முள்ளிவளை பொலீஸார் கைதுசெய்துள்ளார்கள்.
குறித்த வாகனமும் 05 மாடுகளும் கைதான பொலீஸ் அதிகாரியும் முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முள்ளியவளை பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM