குகைக்குள் சிக்கிய சிறுவர்களும் அவர்களது பயிற்றுவிப்பாளரும் இரண்டு வாரங்களின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டதை தாய்லாந்து மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
12 சிறுவர்களும் உயிருடன் மீட்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை மீட்பு நடவடிக்கை பல மாதங்கள் நீடிக்கலாம் என்ற அவநம்பிக்கைகளிற்கு மத்தியில் உலகநாடுகள் இணைந்து சிறுவர்களை மீட்டுள்ளன.
பிரிட்டிஸ் நிபுணர்கள் தலைமையிலான சுழியோடிகள் குழுவொன்றும் தாய்லாந்தின் நேவி சீல் படைப்பிரிவை சேர்ந்தவர்களும் குகைக்குள் நுழைந்து சிறுவர்களை ஓவ்வொருவராக கடும் போராட்டத்திற்கு மத்தியில் நீண்ட தூரத்திலிருந்து வெளியே கொண்டு வந்துள்ளனர்.
குகைக்குள் இருந்த சிறுவர்கள் அனைவரும் மீட்கப்பட்ட செய்தி வெளியானதும் தாய்லாந்து அதனை கொண்டாடிவருகின்றது.
குகைக்கு அருகில் உள்ள சியாங் ராய் நகரின் மக்கள் வீதிகளில் இறங்கி சிறுவர்கள் மீட்கப்பட்டதை கொண்டாடி வருகின்றனர்.வாகனச்சாரதிகள் தங்கள் வாகனங்களின் ஓலிகளை எழுப்பி மகிழ்ச்சி வெளியிட்ட அதேவேளை சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு வெளியே மக்கள் நடமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இது எனது வாழ்க்கையின் மிக முக்கியமான தருணம் நான் இதனை என்றும் நினைவில் வைத்திருப்பேன் என உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நபர் ஒருவர் தெரிவித்தார்.
நான் அழுத நாட்கள் உண்டு தாய்லாந்து மக்கள் ஒருவரையொருவர் நேசிப்பதை பார்த்து நான் மகிழ்ச்சியடைகின்றேன் என அவர் குறிப்பிட்டார்.
என்ன நடக்கின்றது என்பதை உன்னிப்பாக அவதானித்து வந்த தாய்லாந்து மக்கள் சிறுவர்கள் மீட்கப்பட்ட பின்னர் சமூக ஊடகங்களில் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை டொனால்ட் டிரம்ப் தெரேசா மே போன்ற உலக தலைவர்களும் தங்கள் மகிழச்சியை வெளியிட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM