மேலதிக நேர பணிக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீது அவரது கார் ஓட்டுனர் புகார் அளித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கார் ஓட்டுனராக பணி புரிந்தவர் நோயல் சின்ட்ரன். இவர் கடந்த 25 ஆண்டுகளாக டிரம்பின் கார் ஓட்டுனராக இருந்தார்.
டிரம்ப், அவரது குடும்பத்தினர் மற்றும் வர்த்தக நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவருக்கும் ஓட்டுனராக பணியாற்றினார். இந்நிலையில் அவர் டிரம்ப் நிறுவனத்தின் மீது நீமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், கடந்த 6 ஆண்டுகளாக டிரம்ப் மற்றும் அவரது நிறுவனத்துக்கு 3,300 மணி நேரம் ‘மேலதிக நேரம்’ பணி செய்துள்ளேன். ஆனால் அதற்கான சம்பளம் தரவில்லை. எனவே மணிக்கு ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.1 கோடியே 20 இலட்சம் கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே ஓட்டுனர் நோயல் சின்ட்ரனின் குற்றச்சாட்டை டிரம்ப் நிறுவனம் மறுத்துள்ளது. அவருக்கு உரிய சம்பளம் வழங்கப்பட்டு விட்டது. அவரது புகாரை நீதிமன்றத்தில் சந்திப்போம் என தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM