தென்னாசியாவிலேயே அதிகளவானவர்கள் காணாமல்போன நாடு இலங்கை என காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
காணாமல்போனவர்கள் தொடர்பான 13,000 கோப்புகளை முன்னைய தேசிய நல்லிணக்க ஒருங்கிணைப்பு அமைச்சு வழங்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
காணாமல்போனவர்கள் குறித்த ஆவணங்களை அலுவலகம் கோரியதை தொடர்ந்து பல கிராமசேவையாளர்கள் தங்களிடமிருந்த கோப்புகளை அமைச்சிடம் கையளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னைய தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சிடமிருந்து 13,000 கோப்புகள் கிடைத்துள்ளன,இந்த கோப்புகளில் உள்ள விடயங்களை ஆராய்ந்து வருகின்றோம், என தெரிவித்துள்ள சாலிய பீரிஸ் குறிப்பிட்ட கோப்பில் உள்ள சம்பவங்கள் குறித்து ஏற்கனவே நாங்களும் ஆராய்ந்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் 12 பிராந்திய அலுவலகங்களை அமைக்க எண்ணியுள்ளதாகவும் காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
12 பிராந்தியங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம் இதில் 5 அலுவலகங்கள் வடக்கிலும் 3 அலுவலகங்கள் கிழக்கிலும் அமையவுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் எங்கள் விசாரணைகளை துரிதப்படுத்தமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தென்னாசியாவிலேயே அதிகளவானவர்கள் காணாமல்போன நாடு இலங்கை என தெரிவித்துள்ள சாலியபீரிஸ் 1970 களில் சைப்பிரசில் 4000 பேர் காணாமல்போனார்கள் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக 1990களில் அலுவலகமும் அமைக்கப்பட்டது இந்த விசாரணைகள் இன்று வரை தொடர்கின்றன என தெரிவித்துள்ளதுடன் இலங்கையின் விசாரணைகளும் நீண்ட காலம் நீடிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM