இலங்கை கடற்படை வசமுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போரட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த ஒரு வார காலத்தில் இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த பதினாறு மீனவர்களையும் மூன்று விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கையில் சிறைகளில் அடைத்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இராமேஸ்வரம் விசைபடகு மீனவர்கள் இன்று இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர்.
இக்கூட்டத்தில் இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வேண்டும், கடந்த 5 ஆம் திகதி ,கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் மீது புதிய வெளிநாட்டு மீன்பிடி தடைச் சட்டம் அமுல்படுத்த இலங்கை முயற்சித்து வருவதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தும், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை வசமுள்ள தமிழக படகுகளுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும், டீசல் விலை அதிகரிப்பால் மீன்பிடி தொழில் பாதிப்படைவதால் டீசலின் விலை உயர்வை திரும்பப் பெறவேண்டும் ஆகிய ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஆகும் பட்சத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, தஞ்சை வேதாரணயம் உள்ளிட்ட ஐந்துமாவட்ட மீனவர்கள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்த உள்ளதாக மீனவஅமைப்புகள் தெரிவித்துள்ளன.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் சுமார் 850 க்கும் மேற்ப்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. சுமார் 10 ஆயிரம் மீனவர்களும் 5 ஆயிரம் மீன்பிடி சார் தொழிலாளர்களும் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு கோடி ரூபா வர்த்தகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM