(எம்.மனோசித்ரா)
2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷவை நிறுத்துவதை இடதுசாரிக் கட்சி என்ற வகையில் நாம் ஏற்றுக் கொளளப் போவதில்லை என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாண தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
2020 ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷவை நிறுத்துவதற்கு இடசாரி கட்சி என்ற வகையில் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. கடந்த வாரம் இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை.
எனினும் இவ்விடயம் குறித்து கூட்டு எதிரணியிலுள்ள கட்சிகளுக்குள் முரண்பட்ட கருத்துக்கள் காணப்படுக்கின்றன. பஷில் ராஜபக்ஷவை வேட்பாளராக நிறுத்தும்படி சிலர் பரிந்துரைத்துள்ளனர். இன்னும் சிலர் மஹிந்த ராஜபக்ஷவை நிறுத்துமாறும் கூறுகின்றனர். எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தலுக்கு சுமார் ஒன்றரை வருடங்கள் காணப்படுகின்றன.
எனவே இது குறித்து அடுத்த கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM