பிரகீத் எக்னெலிகொட என்ற ஒரு நபரை எமக்கு தெரியாது நான் அவரை கண்டதும் இல்லை. ஆனால் பிரகீத் எக்னெலிகொட உயிருடன் உள்ளார் என நன் இன்னும் நம்புகின்றேன் என பிரதியமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவத்துள்ளார். பிரகீத் எக்னெலிகொட தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் நல்ல அபிப்பிராயம் ஒன்று என்னிடம் இல்லை. ஆனாலும் உண்மைகளை கண்டறிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பிரகீத் எக்னேலிகொட தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
பிரகீத் எக்னேலிகொடவின் விடயம் தொடர்பில் ஹோமாகம நீதிமன்றில் முழுமையான காரணங்களை தெரிவித்துள்ளேன். பிரகீத் எக்னேலிகொட தொடர்பில் எனக்கு தெரிந்த அனைத்து விடயங்களையும் நாம் தெரிவித்துள்ளேன். ஆனால் பிரகீத் எக்னெலிகொட என்ற ஒரு நபரை எமக்கு தெரியாது நான் கண்டதும் இல்லை. ஆனால் இந்த விடயம் தொடர்பில் கூறுவதாயின் மஞ்சுள வெடிவர்தன என்ற நண்பர் ஒருவர் எனக்கு உள்ளார். அவர் என்னுடைய பாடசாலை நண்பர். மஞ்சுள என்ற நண்பர் எனக்கு தெரிவித்த காரணங்களையே நான் இங்கு வந்து தெரிவித்தேன்.
அதேபோல் பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பிரகீத் எக்னேலிகொடவை இராணவம் கொலை செய்துள்ளது என்ற கருத்தை முன்வைத்தபோது இவ்வாறான ஒரு கதையும் உள்ளது என்று நான் தெரிவித்தேன். எனது நண்பர் எனக்கு தெரிவித்த காரணம் தொடர்பில் எமக்கு நம்பிக்கை இருந்தது. ஆகவே அவர் தெரிவித்த காரணகளை இன்றும் நன் நம்புகின்றேன்.
அதேபோல் உண்மையில் பிரகீத் எக்னேலிகொட பெல்ஜியம் பிரசீல் நகரில் உயிருடன் இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அப்போது எனக்கு தெரிவித்தார். ஆகவே இந்த விடயம் தொடர்பில் உண்மையான விசாரணை ஒன்றை முன்னெடுக்க வேண்டும். ஒருவேளை இந்த காரணிகள் உண்மையாக இருந்தால் இராணுவ வீரர்கள் மீதான குற்றச்சாட்டு பொய்யாகிவிடும். ஆகவே அதை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். எவரும் குற்றம் செய்யாது தண்டிக்கப்படுவது நியாயமற்றது.
அதேபோல் பிரகீத் எக்னேலிகொட தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் நல்ல அபிப்பிராயம் ஒன்று என்னிடம் இல்லை. இறுதி யுத்தத்தில் இராணுவம் இரசாயன ஆயுதங்களை பாவித்தது என்று சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்த கருத்து மிகவும் தவறானது. ஆனால் இப்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு கண்டால் நிலைமைகள் மாறும். அவ்வாறு இல்லாவிட்டால் எமது இராணுவம் முழுமையாக தவறானது என்ற நிலைமை உலகம் முழுவதும் பரப்பப்படும். ஆகவே உண்மைகளை கண்டறிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது பிரகீத் எக்னேலிகொட என்ற நபர் உண்மையில் ஒரு ஊடகவியலாளரா ? அவரது எந்தவித செய்திகளையும் எனது ஊடகதுறை காலகட்டத்தில் நான் அவதானித்ததில்லை என சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா கூறுகையில்,
அவர் ஒரு ஊடகவியலாளர் என்றது தொடர்பில் முதலில் சுதந்திர ஊடக அமைப்பே கருத்துக்களை முன்வைத்தது. அந்த அமைப்பினாலேயே முதலில் இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டது. ஆகவே அவர்களிடம் முதலில் இந்த கேள்வியை கேட்க வேண்டும். எனவே இந்த அமைப்பு ஊடகவியலாளர் இல்லாத ஒருவரை ஊடகவியலாளராக சித்தரித்து இந்த பிரச்சினையை பெரிதுபடுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM