பிரகீத் எக்­னெ­லி­கொட எனும் நபரை எனக்குத் தெரி­யாது கண்­டதும் இல்லை : ஆனால் உயி­ருடன் இருக்­கிறார் என்­பதை நம்­பு­கிறேன்

Published By: Robert

26 Feb, 2016 | 11:13 AM
image

பிரகீத் எக்­னெ­லி­கொட என்ற ஒரு நபரை எமக்கு தெரி­யாது நான் அவரை கண்­டதும் இல்லை. ஆனால் பிரகீத் எக்­னெ­லி­கொட உயி­ருடன் உள்ளார் என நன் இன்னும் நம்­பு­கின்றேன் என பிர­தி­ய­மைச்சர் அருந்­திக பெர்­னாண்டோ தெரி­வத்­துள்ளார். பிரகீத் எக்­னெ­லி­கொட தொடர்பில் தனிப்­பட்ட ரீதியில் நல்ல அபிப்­பி­ராயம் ஒன்று என்­னிடம் இல்லை. ஆனாலும் உண்­மை­களை கண்­ட­றிய விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைமை அலு­வ­ல­கத்தில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போது பிரகீத் எக்­னே­லி­கொட தொடர்பில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய கேள்­விக்கு பதில் கூறு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

பிரகீத் எக்­னே­லி­கொ­டவின் விடயம் தொடர்பில் ஹோமா­கம நீதி­மன்றில் முழு­மை­யான கார­ணங்­களை தெரி­வித்­துள்ளேன். பிரகீத் எக்­னே­லி­கொட தொடர்பில் எனக்கு தெரிந்த அனைத்து விட­யங்­க­ளையும் நாம் தெரி­வித்­துள்ளேன். ஆனால் பிரகீத் எக்­னெ­லி­கொட என்ற ஒரு நபரை எமக்கு தெரி­யாது நான் கண்­டதும் இல்லை. ஆனால் இந்த விடயம் தொடர்பில் கூறு­வ­தாயின் மஞ்­சுள வெடி­வர்­தன என்ற நண்பர் ஒருவர் எனக்கு உள்ளார். அவர் என்­னு­டைய பாட­சாலை நண்பர். மஞ்­சுள என்ற நண்பர் எனக்கு தெரி­வித்த கார­ணங்­க­ளையே நான் இங்கு வந்து தெரி­வித்தேன்.

அதேபோல் பாரா­ளு­மன்­றத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் உறுப்­பி­னர்கள் பிரகீத் எக்­னே­லி­கொ­டவை இரா­ணவம் கொலை செய்­துள்­ளது என்ற கருத்தை முன்­வைத்­த­போது இவ்­வா­றான ஒரு கதையும் உள்­ளது என்று நான் தெரி­வித்தேன். எனது நண்பர் எனக்கு தெரி­வித்த காரணம் தொடர்பில் எமக்கு நம்­பிக்கை இருந்­தது. ஆகவே அவர் தெரி­வித்த கார­ண­களை இன்றும் நன் நம்­பு­கின்றேன்.

அதேபோல் உண்­மையில் பிரகீத் எக்­னே­லி­கொட பெல்­ஜியம் பிரசீல் நகரில் உயி­ருடன் இருப்­ப­தாக மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு­வரும் அப்­போது எனக்கு தெரி­வித்தார். ஆகவே இந்த விடயம் தொடர்பில் உண்­மை­யான விசா­ரணை ஒன்றை முன்­னெ­டுக்க வேண்டும். ஒரு­வேளை இந்த கார­ணிகள் உண்­மை­யாக இருந்தால் இரா­ணுவ வீரர்கள் மீதான குற்­றச்­சாட்டு பொய்­யா­கி­விடும். ஆகவே அதை கருத்தில் கொண்டு செயற்­பட வேண்டும். எவரும் குற்றம் செய்­யாது தண்­டிக்­கப்­ப­டு­வது நியா­ய­மற்­றது.

அதேபோல் பிரகீத் எக்­னே­லி­கொட தொடர்பில் தனிப்­பட்ட ரீதியில் நல்ல அபிப்­பி­ராயம் ஒன்று என்­னிடம் இல்லை. இறுதி யுத்­தத்தில் இரா­ணுவம் இர­சா­யன ஆயு­தங்­களை பாவித்­தது என்று சர்­வ­தேச ஊடகம் ஒன்­றிற்கு தெரி­வித்த கருத்து மிகவும் தவ­றா­னது. ஆனால் இப்­போது எழுந்­துள்ள பிரச்­சி­னைக்கு தீர்வு கண்டால் நிலை­மைகள் மாறும். அவ்­வாறு இல்­லா­விட்டால் எமது இரா­ணுவம் முழு­மை­யாக தவ­றா­னது என்ற நிலைமை உலகம் முழு­வதும் பரப்­பப்­படும். ஆகவே உண்­மை­களை கண்­ட­றிய விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்டும் எனக் குறிப்­பிட்டார்.

இந்த செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போது பிரகீத் எக்­னே­லி­கொட என்ற நபர் உண்­மையில் ஒரு ஊட­க­வி­ய­லா­ளரா ? அவ­ரது எந்­த­வித செய்­தி­க­ளையும் எனது ஊட­க­துறை கால­கட்­டத்தில் நான் அவ­தா­னித்­த­தில்லை என சிரேஷ்ட ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் கேள்வி எழுப்­பினர். அதற்கு பதி­ல­ளித்த இரா­ஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா கூறு­கையில்,

அவர் ஒரு ஊட­க­வி­ய­லாளர் என்­றது தொடர்பில் முதலில் சுதந்­திர ஊடக அமைப்பே கருத்­துக்­களை முன்வைத்தது. அந்த அமைப்பினாலேயே முதலில் இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டது. ஆகவே அவர்களிடம் முதலில் இந்த கேள்வியை கேட்க வேண்டும். எனவே இந்த அமைப்பு ஊடகவியலாளர் இல்லாத ஒருவரை ஊடகவியலாளராக சித்தரித்து இந்த பிரச்சினையை பெரிதுபடுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:28:20
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27