''டிசெம்பரில் மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானம்'' 

Published By: Daya

07 Jul, 2018 | 12:30 PM
image

(எம்.மனோசித்ரா)

மாகாண சபை தேர்தலை எதிர்வரும் டிசெம்பர் மாதத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்கல் நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு அனைத்து தரப்புகளுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். 

இதனடிப்படையில் இவ்வாரத்தில் கட்சி தலைவர்களின் கூட்டத்தை நடத்துமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அறிவித்தல் விடுத்துள்ளார். 

இதன் போது எதிர்வரும் டிசெம்பர் மாதத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துதல் குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும். குறிப்பாக தேர்தல் நடத்தும் முறைமை குறித்து இவ்வாரம் இடம்பெறவுள்ள கட்சி தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும். 

இதே வேளை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை சந்தித்து  டிசெம்பரில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை கவனத்தில் கொள்ளுமாறு உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகளுக்கான அமைச்சருக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார். 

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிரதான கட்சிகளாக ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன டிசெம்பரில் இடம்பெற கூடிய மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணியமைத்து போட்டியிடுவதா என்பது குறித்து இறுதி தீர்மானம் எடுக்க வில்லை.

 எவ்வாறாயினும் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சுதந்திர கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை கருத்தில் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலுவான கூட்டணி ஒன்றை அமைத்து தேர்தலை எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13