இராஜதுரை ஹஷான்)
நாட்டின் இறையாண்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் விஜயகலா மகேஷ்வரன் பகிரங்கமாக கருதது வெளியிட்டுள்ளார் எனவே அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு பிரஜாவுரிமை பறிக்கப்பட வேண்டும் என தெரிவித்த அட்மிரல் சரத் வீரசேகர தேசிய அரசாங்கம் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை கருத்திற்கொண்டு அதனை ஆதராமாக கொண்டு இவருக்கு எதிராக சட்ட நடிவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இராணுவத்தினரது உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்.
அரசாங்கத்தின் முக்கிய பதவி வகிக்கும் அமைச்சர் நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால் எவ்வாறான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதவாவது அரசியலமைப்பின் 157வது அத்தியாயத்தின் ஏ பிரிவில் ஐக்கியபடுத்தப்பட்டுள்ள ஒற்றையாட்சி இலங்கை குடியரசில் இனவாத கருத்துக்களை பரப்பி தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் விடுத்து தேசதுரோகம் செய்யும் அமைச்சர்களின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டு பிரஜாவுரிமை இரத்து செய்வதோடு அமைச்சு பதவியும் இரத்து செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM