(எம்.மனோசித்ரா)
சிறுவர் நன்னடத்தை பிரிவு மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை என்பன துஷ்பிரயோகம் செய்பவர்களிடத்திலேயே சிறுவர்களை மீண்டும் தள்ளிவிட முயற்சி செய்வதாகவும், இவ்வாறான செயற்பாடுகளில் அரச நிறுவனங்கள் கொண்டிருக்கும் செயலற்ற நிலையினை கண்டிப்பதாகவும் தெரிவித்து சமூக நீதிக்கான வெகுசன அமைப்பு ஆர்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தது.
நுகேகொட நீதிமன்றத்திற்கு முன்னதாக நேற்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்,
எமது நாட்டில் இயங்கிவரும் சில சிறுவர் இல்லங்கள் பற்றிய தகவல்கள் சிறுவர் நன்னடத்தை பிரிவு மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை என்பவற்றுக்கு வழங்கப்பட்டிருந்தும், மீண்டும் அவற்றுக்கு சிறுவர்களை அனுப்புவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளமை கண்டிக்கத்தக்க விடயமாகும்.
இதே வேளை இவ்வாறான விடயங்கள் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்விசாரணைகளின் போது பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் மனநலம் குறைந்தவர்களாகக் காண்பிக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களையே குற்றம் சாட்டும் நடவடிக்கையையே நீதிமன்றத்தில் தொடர்ந்தும் செய்து வருகின்றனர்.
சிறுவர்கள் வாழ்வதற்கு பொறுத்தமற்றது என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் அடையாளம் காணப்பட்ட சிறுவர் இல்லங்களுக்கு சிறுவர்களை அனுப்புதவற்கு அச் சபையே தற்போது அனுமதியினையும் வழங்கி வருகின்றது.
இதே வேளை சிறுவர்களுக்கு பொறுத்தமான அரச பாடசாலைகளை கண்டறியுமாறு நன்னடத்தை பிரிவுக்கு நீதிமன்றம் கோரிக்கை விடுத்திருத்திருந்து போதிலும் அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இவ்வாறான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM