இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய, ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்களை கைதுசெய்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் இன்று அதிகாலை 3 மணியளவில் கச்சத்தீவு அருகே தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த குறித்த மீனவர்களை கைதுசெய்த இலங்கை கடற்படையினர் அவர்களின் இரு படகுகளையும் வலைகளையும் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தேவதாஸ், பிரான்சிஸ், சம்ஜஸ், சுதன் மற்றும் அலெக்ஸ்பாண்டியன் உள்ளிட்ட 12 பேரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட கடற்படையினர், மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM