இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

Published By: Vishnu

05 Jul, 2018 | 11:49 AM
image

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய, ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்களை கைதுசெய்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் இன்று அதிகாலை 3 மணியளவில் கச்சத்தீவு அருகே தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த குறித்த மீனவர்களை கைதுசெய்த இலங்கை கடற்படையினர் அவர்களின் இரு படகுகளையும் வலைகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தேவதாஸ், பிரான்சிஸ், சம்ஜஸ், சுதன் மற்றும் அலெக்ஸ்பாண்டியன் உள்ளிட்ட 12 பேரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட கடற்படையினர், மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01