அமெரிக்காவின் அடையாள சின்னமாக அமைந்துள்ள சுதந்திர தேவி சிலை மீது ஏறிய நபரால் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்குவது நியூயோர்க் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலை.
குறித்த சிலை மீது நேற்று மனித உருவம் ஒன்று ஏறிச்சென்று உட்கார்ந்து கொண்டிருப்பதாக நியூயோர்க் நகர பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து,பொலிஸார் சுதந்திர தேவி சிலையை சுற்றி தேடுதல் வேட்டை நடத்தினர். சிலையின் மேலே உள்ள ஒரு பீடத்தில் மர்ம நபர் ஒருவர் இருப்பதை கண்டனர்.
குறித்த நபரை கீழே இறங்குமாறு கேட்டும் அவர் மறுத்துவிட்டார். நான்கு மணி நேர போராட்டத்துக்கு பிறகு குறித்த நபரை கைது செய்தனர்.
குறித்த நபரிடம் நடத்திய விசாரணையில், அமெரிக்காவி்ல் குடியேற்றம் மற்றும் சுங்க அமுலாக்கத்துறை ஏஜென்சி முறையை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிலைமீது ஏறி போராட்டம் நடத்த முயன்றது தெரிய வந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM