அறநெறியின் மூலம் ஒரு மனிதனை நல்ல பண்புகளை கொண்ட மனிதனாக மாற்ற முடியும். சிறைத்தண்டனைக்குட்பட்ட நபர் ஒருவரை கூட அறநெறியால் சீர்படுத்த முடியும். எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு கட்டாயம் அறநெறி கல்வியை பெற்று கொடுக்க வேண்டும் என இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ. உமா மகேஸ்வரன் கருத்து தெரிவித்தார்.
இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கும் விழா தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மாலை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ. உமா மகேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கும் விழா முதல்முறையாக நடைப்பெறவிருக்கும் அதேவேளை இலங்கையின் 22 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கௌரவிக்கப்பட உள்ளனர்.
இந்நிகழ்வில் புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, அறநெறி மற்றும் இந்துபண்பாட்டு நிதியம் ஆகியவற்றின் உறுப்பினரும் அறநெறி பாடசாலையின் ஆலோகசரும், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளருமான எஸ். தில்லைநடராசா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM