"மோத வேண்­டு­மெனில் எம்­மோடு மோதுங்கள்"

Published By: Vishnu

04 Jul, 2018 | 08:08 AM
image

(நா.தனுஜா)

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தொடர்பில் எமது பத்­தி­ரிகை வெளி­யிட்ட செய்தி தொடர்பில் ஏதேனும் தெளி­வு­ப­டுத்­தல்கள் தேவைப்­படின் எமது பத்­தி­ரி­கையின் உயர்­மட்ட பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­களைத் தொடர்­பு­கொள்ள முடியும். அதை­வி­டுத்து இலங்­கையின் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு பகி­ரங்க அச்­சு­றுத்தல் விடுக்க வேண்டாம் என "நியூயோர்க் டைம்ஸ்" சர்­வ­தேச நாளி­தழின் ஆசி­ரியர் மைக்கல் ஸ்லெக்மன் தெரி­வித்­துள்ளார். 

அம்­பாந்­தோட்டை துறை­முக விவ­காரம் தொடர்பில் அண்­மையில்"நியூயோர்க் டைம்ஸ்" நாளிதழ்  செய்தி வெளி­யிட்­டி­ருந்­தது. அவ்­வி­டயம் தொடர்பில் மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்­தி­ருந்த கருத்து குறித்து "நியூயோர்க் டைம்ஸ்" நாளி­தழின் ஆசி­ரியர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.  

அவ்­வ­றிக்­கையில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

இலங்­கையின் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மற்றும் சில பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இணைந்து நடத்­திய ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்றின் போது எமது பத்­தி­ரி­கை­யால் கடந்த ஜுன் மாதம் 26 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட அம்­பாந்­தோட்டை துறை­முக விவ­காரம் தொடர்­பான செய்­திக்­கான தகவல் பங்­க­ளிப்­பினை மேற்­கொண்ட இலங்கை ஊட­க­வி­ய­லா­ளர்கள் இரு­வ­ருக்கு பகி­ரங்க அச்­சு­றுத்தல் விடுத்­துள்­ளனர். 

ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு எதி­ரான இவ்­வா­றான அச்­சு­றுத்தல் நட­வ­டிக்­கைகள் ஏற்­கப்­பட முடி­யா­த­வை­யாகும். இத்­த­கைய செயற்­பா­டுகள் ஊடக சுதந்­தி­ரத்­துக்கு தடை­யாக அமை­வ­துடன் ஊட­கங்­களை "அமை­திப்­ப­டுத்தும்" வித­மா­கவும் அமைந்­துள்­ளன. அத்­தோடு செய்­தியை அறிந்­து­கொள்­வதில் இலங்கை மக்கள் கொண்­டுள்ள உரி­மை­யினை மறு­த­லிப்­ப­தா­கவும் உள்­ளது. 

இலங்­கையின் ஊட­க­வி­ய­லா­ளர்கள் எமது நிறு­வ­னத்­துக்கோ அல்­லது வேறு நிறு­வ­னத்­துக்கோ எவ்­வித அச்­சு­றுத்­தல் ­களுமின்றி சுதந்­தி­ர­மாக செயற்­ப­டு­வ­தை உரிய அதி­கா­ர­ச­பைகள் உறு­திப்­ப­டுத்த வேண்டும் என்று எதிர்­பார்க்­கின்றோம். 

மேலும் எமது பத்­தி­ரி­கையில் வெளி­யான செய்தி தொடர்பில் ஏதேனும் முரண்பாடு கள் இருப்பின் "நியூ யோர்க் டைம்ஸ்" பத்தி ரிகையின் உயர்மட்ட ஆசிரியர்களைத் தொடர்புகொள்ள முடியும். அதனை விடு த்து இலங்கை ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் ஏற்கப்பட முடியாதவையாகும் என்று தெரிவித்துள் ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44