விஜயகலாவை கைதுசெய்யக் கோரி  மூன்று முறைப்பாடுகள்

Published By: Vishnu

04 Jul, 2018 | 07:49 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதே தமது முக்கிய நோக்கம் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரி­வித்த சர்ச்­சைக்­கு­ரிய கருத்து தொடர்பில் அவரை உட­ன­டி­யாக கைது செய்­யு­மாறு பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்கு நேற்யை தினம் மூன்று முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன. 

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ரவின் அலு­வ­ல­கத்தில்  இம் மூன்று முறைப்­பா­டு­களும் நேற்று  பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அது தொடர்பில் ஆராய்ந்து விரைவில் பொலிஸ் மா அதிபர் அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­யினை எடுப்பார் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் விடுக்கும் வண்ணம் சிறுவர்  விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் நடந்­து­கொண்­டுள்­ளதால் அவரை உடன் கைது செய்­யு­மாறு சிங்­ஹல ராவய அமைப்பு முறைப்­பாடு ஊடாக பொலிஸ் மா அதி­பரைக் கோரி­யுள்­ளது.

அத்துடன் பிவித்துரு ஹெலஉறுமய சார்பிலும் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அர­சி­ய­ல­மைப்பை மீறும், பயங்­க­ர­வாத தடைச் சட்டம், தண்­டனை சட்டக் கோவை, சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் கீழ் தண்­டனைக்குரிய குற்­றத்தை இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் புரிந்­துள்­ள­தாக கூறி அவரை உடன் கைது செய்து நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வலி­யு­றுத்தி உண்­மையை கண்­ட­றியும் அமைப்பு பொலிஸ் மா அதி­ப­ரிடம் முறைப்­பா­ட­ளித்­துள்­ளது. 

 நேற்று காலை கோட்­டையில் உள்ள பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்கு சென்ற சிங்­ஹல ராவய அமைப்பின் தேசிய அமைப்­பாளர் மாகல்­கந்தே சுதத்த  தேரர் உள்­ளிட்ட தேரர்கள், பொலிஸ் மா அதி­பரின் அலு­வ­ல­கத்தில்  இரா­ஜாங்க அமைச்சர்  விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னுக்கு எதி­ராக முறைப்­பா­ட­ளித்­தனர்.

 மூன்று நாட்­க­ளுக்குள்  குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் நட­வ­டிக்கை எடுக்கத் தவ­றினால், அடுத்­த­கட்­ட­மாக தாம் நீதி­மன்றை நாட­வுள்­ள­தாக முறைப்­பா­ட­ளித்த பின்னர் மாகல்­கந்தே சுதத்த தேரர் கூறினார்.

 இதே­வேளை சட்­டத்­த­ர­ணி­களை உள்­ள­டக்­கிய உண்­மையை கண்­ட­றியும் அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி பிரே­மநாத் சீ தொல­வத்த தலை­மையில் பொலிஸ் தலை­மை­யகம் சென்ற சட்­டத்­த­ர­ணிகள் குழுவும் நேற்று  பொலிஸ் மா அதி­ப­ருக்கு விஜ­ய­கலா மகேஸ்­வரன் தொடர்பில் முறைப்­பாடு செய்­தது.

 அத்த முறைப்­பாட்டில் , இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் அர­சி­ய­ல­மைப்பின் அடிப்­படை அம்­சத்தை மீறி­யுள்­ள­தா­கவும் நாட்டின் ஒரு­மைப்­பாட்டை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளி­யிட்­டுள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

  பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழும் , தண்­டனை சட்டக் கோவையின் 114, 115 ஆம் அத்­தி­யாயங்­களின் கீழும்  விஜ­ய­கலா மகேஸ்­வரன் தண்­ட­னைக்­கு­ரிய குற்­றத்தை புரிந்­துள்ளார். அவரின் கூற்­றா­னது 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின்  பிர­கா­ரமும் இனங்­க­ளுக்கிடையே விரி­சலை ஏற்­ப­டுத்தும் தண்­டனைக்குரிய குற்­ற­மாகும்  என்று    சட்டத்தரணி பிரேமநாத் சி தொலவத்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார். அதனால் சாதாரண ஒருவர் இக்குற்றங்களை செய்தால் பொலிஸார் எவ்வாறான கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பார்களோ அதனை விஜயகலா மகேஸ்வரனின் விடயத்திலும் நடை முறைப்படுத்துமாறு அவர் கோரியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38