கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் மாத்திரம் 35 டெங்கு நோயாளர்கள் இருக்கலாம் எனவும் சந்தேகத்தின் பெயரில் 35 பேரின் இரத்த மாதிரிகள் பாிசேதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மாவட்ட சுகாதார பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பது வழமை.
ஆனால் இந்த ஆண்டில் ஆனி மாதத்திலேயே இதுவரை 35 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.இது வழமைக்கு மாறானது என சுகாதார திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு முன்னைய வருடங்களில் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப்பிரிவின் இணையத்தளத்திலுள்ள தரவுகளின் படி ஆனி மாதங்களில் ஆகக் கூடியது 21 டெங்கு நோயாளர்களே இனங்காணப்பட்டிருந்தனர்.
அத்துடன் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 170 டெங்கு நோயாளிகள் கிளிநொச்சியில் இனங்காணப்பட்டுள்ளனர்.
இது குறித்து சமுதாய வைத்திய நிபுணர்களைத் தொடர்புகொண்டு வினவியபோது, ‘கடந்த வருட ஆனிமாதத் தரவுகளுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் ஆனி மாதம் முடிவதற்கு முன்னரே மிக அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இது ஆபத்தான அறிகுறியாகும் (Outbreak situation) எனத் தெரிவித்தனர்.
எனவே பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகள் உடனடியாக விழிப்படைந்து தத்தமது பிரதேசங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடின் இவ்வருட இறுதிக்குள் பாரிய டெங்குப் பரவலைக் கிளிநொச்சி மாவட்ட மக்கள் எதிர்கொள்ளவேண்டி வரலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM