இந்தியா - கொல்கத்தாவைச் சேர்ந்த புற்றுநோயாளி ஒருவர் நோயின் கொடூரம் தாங்க முடியாமல் தனது தற்கொலையை பேஸ்புக் லைவ்வில் ஒளிபரப்பு செய்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த அரிந்தம் தத்தா என்பவர் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இணைய மையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
இந் நிலையில் திடீரென ரத்தபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட தத்தா மனைவியையும் விவாகரத்து செய்துவிட்டதால் மன அழுத்தத்தில் இருந்ததாக அயலவர்கள் பொலிஸாரிடம் தெரவித்துள்ளனர்.
தற்கொலை செய்ய முடிவு செய்த தத்தா தன்னுடைய மரணம் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதால் அவர் தனது தற்கொலையை பேஸ்புக்கில் லைவ் செய்துள்ளார்.
இதுகுறித்து அதிர்ச்சி அடைந்த பேஸ்புக் பயனாளிகள் பலர் அவரிடம் தற்கொலை முடிவை கைவிடுமாறு அறிவுரை கூறியுள்ளனர். ஒருசிலர் அவருடைய நண்பர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடனடியாக அவரை காப்பாற்றும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆனால் அரிந்தம் தத்தா அதற்குள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
விடயம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தத்தாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் தத்தாவின் தற்கொலைக்கு மன அழுத்தம் மட்டும் தானா காரணம் இல்லை யாராவது தற்கொலைக்கு தூண்டியுள்ளார்களா? என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM