கிளிநொச்சி ஏ9 வீதியில் உமையாள்புரம் பகுதியில் பாதசாரி கடவையில் ஏற்பட்ட விபத்தில் தரம் மூன்றில் கல்வி கற்கும் மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.
பரந்தன் உமையாள்புரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் யதுர்சா எனும் மாணவியே உயிரிழந்துள்ளார்
இன்று காலை ஏழு பதினைந்து மணியளவில் இச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.
தாயுடன் துவிச்சக்கர வண்டியில் பாடசாலைக்குச் சென்ற மாணவியை தாய் பாடசாலைக்கருகில் உள்ள பாதசாரிகள் கடவையருகில் இறக்கிவிட்டு வீடு திரும்பி விட்டார்.
இதன் போது பாதசாரிகள் கடவையை குறித்த மாணவி கடந்து சென்ற போது கிளிநொச்சி பக்கத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ஹயஸ் ரக வாகனம் மோதியுள்ளது.
உடனடியாக குறித்த வாகனத்திலேயே மாணவியை ஏற்றிக்கொண்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு சென்றிருந்த போது மாணவி உயிரிழந்து விட்டார்.
உயிரிழந்த மாணவி குடும்பத்தில் ஒரேயொரு பெண் பிள்ளை ஆவார். சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
வாகனத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு, வாகனசாரதியையும் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM