சர்வதேச கிரிக்கெட் சம்மேளத்தின் "ஹோல் ஒவ் பேம்" கௌரவப் பட்டியலில் ராகுல் டிராவிட், ரிக்கி பொண்டிங், கிளைர் டெய்லர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள், அதிக விக்கெட்டுக்கள் மற்றும் பல்வேறு சாதனைகள் படைத்தவர்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அவர்களை ஐ.சி.சி.யின் அதியுச்ச கௌரவமான "ஹோல் ஒவ் பேம்" என்ற பட்டியலில் இணைத்து கௌரவித்து வருகிறது.
இப் பட்டியலில் இலங்கை அணியின் முரளிதரன் இணைக்கப்பட்டு கடந்த ஆண்டு அவருக்கான விருதை ஐ.சி.சி. வழங்கியிருந்தது.
அதேபோல் இந்திய கிரிக்கெட்டில் ஏற்கனவே சாதனை படைத்திருந்த சுனில் கவாஸ்கர், பிஷன்சிங் பேடி, கபில் தேவ், அனில் கும்ப்ளே ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வருடம் மூவரை இந்த கௌரவப் பட்டியலில் ஐ.சி.சி. இணைத்துள்ளது. இதில் ஒருவர் இந்திய கிரிக்கெட் அணியின் தடுப்புச்சுவர் என்று அழைக்கப்பட்ட ராகுல் டிராவிட் ஆவார். மற்ற இருவரும் அவுஸ்திரேலியாவின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் மற்றும் இங்கிலாந்து மகளிர் அணி வீராங்கனை கிளைர் டெய்லர் ஆகியோராவர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM