இலங்கை கடற்படையின் தெற்கு தலைமையகத்தை அம்பாந்தோட்டைக்கு இடமாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பும் இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழேயே இருக்கும். எனவே அதன் பாதுகாப்பு தொடர்பில் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த 29 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற மறைந்த பொருளாதார நிபுணர் சமன் கெலும் கமகேவின் நினைவுதின நிகழ்வில் பிரதமர் ஆற்றிய உரை தொடர்பில் ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி கள் குறித்துவிளக்கமளிக்க கடமைபட்டுள்ளோம். சீன ஜனாதிபதி மற்றும் அந்நாட்டின் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நாடுகளுக்கும் நன்மை கிடைக்கும் வகையில் பிரதமர் ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்திருந்ததாக பிரதமர் இந்த நிகழ்வில் குறிப்பிட்டிருந்தார்.
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை யுத்த நோக்கத்திற்காக பயன்படுத்தக்கூடாது என இலங்கை சீனாவிற்கு அறிவித்திருக்கின்றது.
அதனால் தெற்கிலுள்ள கடற்படையின் தலைமையகத்தை அம்பாந்தோட்டைக்கு இடமாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். எனவே, அது தொடர்பில் நாம் அச்சப்படவேண்டிய அவசியமில்லை.
இதன்போது சீன இராணுவம் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் முகாம் ஒன்றை அமைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று ஒருமுறை அமெரிக்க பிரஜை ஒருவர் பிரதமரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த பிரதமர் முழுமையான இராணுவ பிரிவு ஒன்று அம்பாந்தோட்டையில் நிறுவப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். வெளி இராணுவ தலையீட்டுக்கு தான் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டோம் என பிரதமர் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடவில்லை. இலங்கை இராணுவப் பிரிவு நிறுவப்பட்டுள்ள வளை யத்தில் வேறு எந்தவொரு கடற்படையும் உள்வர முடியாது என்றும் பிரதமர் இதன்போது வலியுறுத்திக் கூறியிருந்தார்.
அம்பாந்தோட்டை துறைமுகமானது விரைவில் அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய அபிவிருத்தி குறைந்த மாவட்டங்களின் அத்தியாவசிய பொரு ளாதார அபிவிருத்தியை முன்னெடுப்பதற் கான ஒரு வர்த்தக துறைமுகமாக மாற்றம டையும் என்பதை தெரிவிக்கின்றோம் என்று பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM