நியுயோர்க் டைம்ஸிற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக சீனா நிறுவனங்களிடமிருந்து பணம் பெற்றார் என நியுயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவல் இலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே மகிந்த ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.
எனக்கு பாரிய அவதூறை ஏற்படுத்தும் விதத்திலான அந்த தகவல்களில் சிறிதளவும் உண்மையில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனது சட்டத்தரணிகள் மூலமாக நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
நியுயோர்க் டைம்ஸின் குறிப்பிட்ட கட்டுரை அரசியல்நோக்கங்களை கொண்டது இலங்கையில் உள்ள சில தரப்பினர் அதனை புகுத்தியுள்ளனர் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM