பதினாறு பேர் அணிக்கு எதிராக  ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை- ரோஹன லக்ஷமன் பியதாஸ

Published By: Daya

30 Jun, 2018 | 04:36 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதினாறு பேர் அணிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என அக்கட்சியின் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாஸ தெரிவித்துள்ளார். 

கண்டியில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறியுள்ள பதினாறு பேர் அணியினர் இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலேயே உள்ளனர். அவர்கள் கட்சியின் மத்திய செயற்குழுவில் அங்கம் வகிக்கன்றனர். பாராளுமன்ற குழுக்கூட்டத்திலும் கலந்துகொள்கின்றனர். கட்சியின் மறுசீரமைப்பு பணிகளிலும் பங்கெடுக்கின்றனர். எனவே அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எமுக்கப்போவதில்லை. 

மேலும் அவ்வுறுப்பினர்கள் எவரும் தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகிக்கொள்வதாக எழுத்துமூலம் அறியத்தரவுமில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வந்துள்ளதை வரலாறு நெடுகிலும் காணமுடிகிறது.

ஆயினும் கட்சியை எவராலும் பலமிழக்கச் செய்ய முடியாது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சாதாரண மக்கள் முதல் சகலரினதும் ஆதரவைப் பெற்ற கட்சியாகும். எனவே மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை  கட்டியெழுப்பி பலமான நிலைக்கு கொண்டுவருவோம்.

அத்துடன் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்கமைவாக அபேட்சகரை களமிறக்குவோம். அந்த அபேட்சகர் பொது வேட்பாளராக இருக்கமாட்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கீகாரத்தைப் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அபேட்சகராக இருப்பார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51