ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை ஏற்கனவே தீர்மானித்துவிட்டோம்- ஐதேக

Published By: Rajeeban

30 Jun, 2018 | 03:32 PM
image

ஐக்கியதேசிய கட்சி ஏற்கனவே தனது ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை தீர்மானித்து விட்டது என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

பொதுஎதிரணியிடம்  ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் என எவரும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொது எதிரணியில் உள்ள பிரசன்ன ரணதுங்க குழுவினர் பசில்ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் அதேவேளை விமல்வீரவன்ச, உதயகம்மன்பில போன்றவர்கள் கோத்தபாய ராஜபக்சவை நிறுத்துவதற்கு முயல்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரும் ஜனாதிபதி சிறிசேன முன்னாள் ஜனாதிபதியை பிரதமராக நியமிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துவருகின்றனர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஐக்கியதேசிய கட்சி தனது வேட்பாளர் யார் என்பதை ஏற்கனவே தீர்மானித்துவிட்டது தேர்தல் நெருங்கும் வேளை அதனை அறிவிப்போம் என கவிந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30