ஈராக் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதிகளில் 12 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது
ஈராக் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் முற்றிலுமாக அகற்றப்ப்ட நிலையில் வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய சுமார் 20 ஆயிரம் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக மரணதண்டனையை நிறைவேற்றுமாறு ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாடி சமீபத்தில் உத்தரவிட்டார்.
ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 8 பேர் சமீபத்தில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதால் மக்கள் கொதிப்படைந்துள்ள நிலையில் மரண தண்டனையை துரிதமாக நிறைவேற்ற சிறை அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில், இவர்களில் 12 பேருக்கு நேற்று மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.
ஈராக் சிறைகளில் 100 வெளிநாட்டு பெண்கள் உள்பட சுமார் 300 பேர் மரண தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM