12 தீவிரவாதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றம்

Published By: Digital Desk 4

29 Jun, 2018 | 04:32 PM
image

ஈராக் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதிகளில் 12 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது

ஈராக் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் முற்றிலுமாக அகற்றப்ப்ட நிலையில் வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய சுமார் 20 ஆயிரம் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக மரணதண்டனையை நிறைவேற்றுமாறு ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாடி சமீபத்தில் உத்தரவிட்டார்.

ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 8 பேர் சமீபத்தில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதால் மக்கள் கொதிப்படைந்துள்ள நிலையில் மரண தண்டனையை துரிதமாக நிறைவேற்ற சிறை அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.

இந்நிலையில், இவர்களில் 12 பேருக்கு  நேற்று மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.

ஈராக் சிறைகளில் 100 வெளிநாட்டு பெண்கள் உள்பட சுமார் 300 பேர் மரண தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17