தந்தை செல்வாவினுடைய கோரிக்கைகள், ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்படாமையினாலேயே பிரபாகரன் ஆயுதம் ஏந்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக சபையில் சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றியமைப்பது குறித்த பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
தற்போது பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரங்களை கொண்ட ஜனாதிபதி முறைமையை மாற்ற வேண்டும். தேர்தல் மறுசீரமைப்பு, இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாட்டை நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்திருப்பதானது வரவேற்கப்பட வேண்டியது. புதிய அரசியலமைப்பில் வடகிழக்கு இணைந்த தாயகத்தில் தமிழர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
சர்வதேச நாடுகளில் உரிமைக்காக போராடிய நாடுகளில் ஒற்றையாட்சி முறைமை வெற்றியளிக்காத நிலைமைகளே காணப்படுகின்றன. சமஷ்டி முறைமையிலான ஆட்சி முறைகளே அவ்வாறான நாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அவ்வாறான நிகழ்வு மீண்டும் நிகழாமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
கடந்த காலத்தில் செல்வா– பண்டா, டட்லி –செல்வா ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டபோதும் அவை கிழித்தெறியப்பட்டன. அரசியலமைப்பின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பான விடயங்கள் இடம்பெறுவதற்கான நிலைமைகள் மறுக்கப்பட்டன.
தந்தை செல்வாவுடனான ஒப்பந்தங்கள், கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருந்ததால் அண்ணன் பிரபாகரன் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது. அவ்வாறான நிலைமையில் இலங்கையில் ஒற்றையாட்சி கோட்பாட்டை முன்வைக்காது அனைத்து சமூகங்களை யும் சம அந்தஸ்துடன் வாழ்வதற்கான ஏற்பாடுகள் அரசியல் மறுசீரமைப்பில் உள் வாங்கப்பட வேண்டியது அவசியம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM