பாடசாலை செல்லாத 20 மாணவர்கள் கண்டுபிடிப்பு

Published By: Daya

29 Jun, 2018 | 12:27 PM
image

பாடசாலைக்கு சமுகமளிக்காத 20 மாணவர்கள் இன்று காலை ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள தாளங்குடா வேடர்குடியிருப்பில் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின் பேரில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சியின் வழிகாட்டலில் தாளங்குடா நடமாடும் பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாரி ஜே.எம்.மதுசங்க தலைமைமையிலான பொலிஸார் ஆரையம்பதி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து வீடு வீடாக நடாத்திய தேடுதலில் பாடசாலைக்குச் சமுகமளிக்காது வீடுகளில் முடங்கியிருந்த 20 மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களது பெற்றோரும் அறிவுறுத்தப்பட்டனர்.

மாணவர்களது பாடசாலை புத்தகங்கள் அப்பியாசக் கொப்பிகளும் பரிசோதிக்கப்பட்டன.

குறித்த மாணவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலைக்கு சமுகமளிக்காவிட்டால் பெற்றோர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படுமென பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த தேடுதல் நடவடிக்கை தொடருமென பொறுப்பதிகாரி மதுசங்க மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01