தனது மகளை ஐந்து வருடங்களுக்கு மேலாக அச்சுறுத்தி பாலியல் வல்லுறவிற்குட்படுத்தி வந்த முன்னாள் இராணுவ வீரரான தந்தை ஒருவரை கம்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை கம்பளை மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். கம்பளை போவலை பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது;
சந்தேக நபரான இராணுவ வீரரின் முதல் மனைவி குடும்ப வறுமைக் காரணமாக வெளிநாடு சென்றிருந்த நிலையில் அப்பொழுது 12 வயது சிறுமியாக இருந்த பாதிக்கப்பட்ட 17 வயது யுவதி சந்தேக நபரினால் தொடர்ந்து வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளதாகவும் அக்காலப் பகுதியில் ஒருமுறை மேற்படி சிறுமி கர்ப்பமுற்றதையடுத்து சந்தேகநபர் 18 ஆயிரம் ரூபா கொடுத்து சட்டவிரோத கரு கலைப்பு நிலையமொன்றில் கருகலைப்பு செய்ததாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. மனைவி வெளிநாடு சென்றதன் பின்னர் சந்தேக நபர் மாவனெல்லை பகுதியில் பிரிதொரு பெண்ணை திருமணம் செய்து மூன்று குழந்தைகள் உள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேகநபர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தமையினால் சகித்துக்கொள்ள முடியாது பாதிக்கப்பட்ட சிறுமி தனது பாட்டியுடன் வந்து கடந்த திங்கட்கிழமை கம்பளை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.இதனையடுத்தே மேற்கண்ட உத்தரவினை நீதிவான் பிறப்பித்தார்.
கம்பளைப் பிரதேசத்தில் கடந்த இருவார கால இடைவெளிக்குள் இடம்பெற்ற மூன்றாவது பாலியல் வல்லுறவு சம்ப வம் இதுவாகும். இதில் இரண்டு சம்ப வங்கள் பெற்றத் தந்தையர்களாலும் ஒரு சம்பவம் கூட்டுவல்லுறவு என்பதும் குறிப் பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM