மனித எழும்பு கூடு அகழ்வு பணிகள் தாமதம்

Published By: Daya

28 Jun, 2018 | 01:21 PM
image

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 23ஆவது நாளாகவும்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் முன்னிலையில்  இடம் பெற்று வருகின்ற அகழ்வு பணிகளுக்கு விசேட சட்ட வைத்திய நிபுணர் டபில்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தலைமை தாங்கிவருகின்றார்.

அவருடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா மற்றும் அவரின் குழுவினரும் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டு வருகின்றார். 

மேற்படி அகழ்வு ஆரம்ப பணிகளின் போது மனித வள பற்றாக்குறை அதிகமாக காணப்பட்டதால் அகழ்வு பணிகளை மேற்கொள்வதில் பாரிய சிக்கல் தோற்றம் பெற்றது.

 அத்துடன் அகழ்வு பணியானது மிகவும் மந்த கதியில் இடம் பெற்றது.

 எனவே குறித்த அகழ்வு பணியை விரைவாக நடத்தி முடிப்பதற்காக இலங்கையின் பல பிரதேசங்களிலும் இருந்தும் வைத்திய நிபுணர்கள், பயிற்சி நிலை அதிகாரிகள் ,பேராசிரியர்கள் , பல்கலைகழக மாணவர்கள் , நகர சபை ஊழியர்கள் என பலரும் இணைக்கப்பட்டனர்.

குறித்த நிலையில் தொடர்ச்சியாக சந்தோகத்திற்கு உரிய விதமாக மனித எச்சங்கள் குறித்த வளாகத்தின் மையபகுதி மற்றும் நுழைவு பகுதிகளில் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றது.

 பகுதி அளவிலான எழும்பு கூடுகள் முழு மனித எலும்பு கூடுகள் என சந்தோகத்திற்குறிய விதமாக பல மனித எச்சங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

  இதனால் முழு வளாகமும்   அகழ்வு செய்ய வேண்டிய நிலையும் காணப்படுகின்றது.

 ஆனாலும் தற்போது அழ்வு பணிகளை மேற் கொள்வதற்கும் அகழ்வு பணிகளில் மேலதிகமாக உத்தியோக பூர்வமாக அழைக்கப்பட்டு இணைக்கப்பட்டவர்களுக்கு உணவு , தங்குமிடம் மற்றும் போக்குவரத்து கொடுப்பனவுகளை வழங்குவதற்கான போதுமான நிதி இன்மையால் குறித்த அகழ்வு பணியை தொடர்ச்சியாக கொண்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கான நிதி பங்களிப்பை 'சதோச' நிறுவனத்திடம் கோரியுள்ள போதும் இது வரை குறித்த நிறுவனம் எவ்விதமான சாதகமான பதிலையும் வழங்கவில்லை .

எனவே குறித்த நிறுவனம் நிதி பங்களிப்பை செய்யாத பட்சத்தில் அகழ்வு பணியானது அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு கிடைக்கும் வரை தற்காலிகமாக நிறுத்தப்படலாம் என அறிய முடிகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47