வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வைக்கால பகுதியில் பேருந்தின் சாரதியை தாக்கிவிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 22 ஆம் திகதி கொழும்பை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்தை நிறுத்திய மற்றொரு பேருந்தின் நடத்துனரே வைக்கால பகுதியில் வைத்து மேற்படி தாக்குதல் பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றிருந்தார்.
இந் நிலையில் தாக்குதல் நடத்திய பேருந்தின் நடத்துனரை பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், ஒரே நேரத்தில் கொழும்பு நோக்கி பயணித்த இந்த இரண்டு பயணிகள் பேருந்துகளும் பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட வாய்தார்க்கம் இதற்கான பிரதான காரணம் என தெரிவித்துள்ளானர்.
அத்துடன் இச் சம்பவத்தில் காயமடைந்த பேருந்தின் சாரதி 34 வயதுடைய ராஜாங்கனை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM