(எம்.எம்.மின்ஹாஜ்)
நாட்டில் கணக்கில் எடுக்காத பிளவடைந்த கட்சியின் தலைவரான விமல் வீரவன்சவை சந்தித்தமையின் ஊடாக சுதந்திரக் கட்சியின் 16 பேர் குழுவின் தரம் வெளிப்பட்டுள்ளது.
ஆகவே அரசியலில் 16 பேர் கொண்ட குழுவினர் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர். இவர்களினால் எப்படி ஆட்சியை கவிழ்க்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியது.
சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழுவினர் நேற்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன் நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆட்சியை கவிழ்க்க போவதாக சவால் விட்டனர். இது தொடர்பாக கருத்து வினவிய போதே ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடக மற்றும் தொடர்பாடல் பிரிவின் பிரதானியும் அமைச்சருமான ஹரீன் பெர்ணான்டோ கேசரிக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தேசிய அரசாங்கத்தை விமர்சித்து வெளியேறிய சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழுவினர் நிலைமை கவலைகுரியதாக மாறியுள்ளது. அரசியலில் அவர்கள் அநாதரவாக்கப்பட்டுள்ளனர். அரசியலில் எந்த கட்சியின் பக்கம் செல்வது என்பது தெரியாமல் தட்டுதடுமாறுகின்றனர்.
இதன்படி நேற்று பிளவுப்பட்டுள்ள கட்சி தலைவரை சந்தித்துள்ளனர். தனது கட்சி பாதுகாக்க முடியாத விமல் வீரவன்ச சந்தித்து பேசியுள்ளனர். கட்சி தலைவராகவே கணக்கில் எடுக்க முடியாத விமல் வீரவன்ச சந்தித்தமை ஊடாக சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழுவின் உண்மை நிலைமை வெளிப்பட்டுள்ளது.
ஆகவே சுதந்திரக் கட்சியின் சுயாதீன குழுவினர் அரசியல் அநாதைகளாக ஆக்கப்பட்டுள்ளனர். எங்கு செல்வதென்று தெரியாமல் விமல் வீரவன்சவை சென்று சந்தித்துள்ளமை அதனை உறுதிப்படுத்துகின்றது.
அரசியலில் அநாதைகளானவர்களினால் எப்படி ஆட்சியை கவிழ்க்க முடியும். இந்த ஆட்சியை ஐந்து வருடம் முடியும் வரை கவிழ்க்க முடியாது.
ஆகவே நாம் தொடர்ந்து ஆட்சியை கொண்டு செல்வோம் .
அத்துடன் தற்போது நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான ஏற்பாடுகளை துரிதமாக முன்னெடுத்து வருகின்றோம். தற்போது மிகுதமாக உள்ள காலப்பகுதியை குறைப்பாடுகளை நிவர்த்தி செய்து கொண்டு பயணிக்க உள்ளோம்.
ஆகவே எமது வேலைத்திட்டத்திற்கு நாட்டு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். அண்மையில் நாம் கம் பெரலிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்தோம். இதன் ஊடாக கிராமத்தில் பாரிய அபிவிருத்தியை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM