(இராஜதுரை ஹஷான்)
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை மகா நாயக தேரர்கள் ஹிட்லராக பாவித்தமையின் உள்நோக்கம் அறியாது பலர் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வாதிகார போக்கு கொண்ட ஹிட்டலரின் ஆட்சியின் காரணமாக ஏற்பட்ட அழிவுகளின் தாக்கங்கள் இன்றும் தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றது. இந்நிலையிலை இலங்கை மக்கள் மீண்டும் ஏற்படுத்த மாட்டார்கள்.
ஆனால் தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சிகைளுக்கு இம்முறையிலே தீர்வுகாண முடியும். சுயாதீனமாக இயங்குவதாக குறிப்பிட்டு அனைத்து அரசியல் துறைகளும் சர்வாதிகார போக்கிலேயே செயற்பட்டு வருகின்றது.
அத்துடன் அரசாங்கத்தின் மீதும் அரசியலமைப்பின் மீதும் நாட்டு மக்கள் கொண்டிருந்த மரியாதைகள் இன்று தகர்த்தப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் முறையற்ற நிர்வாகத்தினால் மக்கள் என்றாவது ஒருநாள் சர்வாதிகார ஆட்சியினை தோற்றுவிப்பார்கள்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ இராணுவ ஆட்சியினை ஒரு போதும் தோற்றுவிக்கமாட்டார். நாட்டின் ஜனநாயகத்தினை நிலைநாட்ட செயற்பட்டவர்கள் மீண்டும் குழப்பமான சூழ்நிலைக்கு திரும்ப மாட்டார்கள் .
இன்று நாடு எதிர் கொண்டுள்ள சர்வதேச பிரச்சினைகளுக்கு சர்வாதிகார போக்கிலே தீர்வுகாண முடியும். இதனை கருத்திற் கொண்டே மகாநாயக தேரர்கள் கருத்துக்களை வெளியிட்டனர் என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM