இலங்கை மனிதஉரிமை ஆணைக்குழு மேற்கொண்டுள்ள விசாரணைகளிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயார் என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
ஐக்கியநாடுகளின் அமைதிப்படையில் இடம்பெறவுள்ள இலங்கை படையினர் குறித்த விசாரணைகளால் எழுந்துள்ள சர்ச்சைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
ஐநா அமைதிப்படையில் இடம்பெறவுள்ள இலங்கை வீரர்கள் குறித்து இலங்கையின் சுயாதீன அமைப்பான இலங்கை மனித உரிமை ஆணையகம் விசாரணை செய்வது குறித்து நாங்கள் திருப்தியடைந்துள்ளோம் என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் அமைதிப்படை நடவடிக்கைகளிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள படையினரின் விபரங்களை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்கை படையினரை அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது ஏன் தாமதமாகிவருகின்றது என ஐநா கேள்வி எழுப்பிவருவதாகவும் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து இது குறித்து ஆராய்ந்துள்ளதாக இலங்கை இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மனிதஉரிமை ஆணைக்குழு மேற்கொண்டுள்ள விசாரணைகளிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயார் எனவும் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
அதேவேளை விசாரணைகள் தாமதமாவதால் எழுந்துள்ள பிரச்சினைகளிற்கு தீர்வை காணமுடியும் எனவும் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM