(இரோஷா வேலு)
களுத்துறை - பொலகம்பொல பிரதேசத்தில் வைத்து வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ரிவோல்வர் வகை கைத்துப்பாக்கியுடன் நபரொருவர் களுத்துறை சட்டஅமுலாக்கல் பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு மத்துகம பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
களுத்துறை - மீகஹதென்ன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலகம்பொல பகுதியில் வைத்து வெளிநாட்டின் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் வகை கைத்துப்பாக்கியுடன் நபரொருவர் களுத்துறை சட்டஅமுலாக்கல் பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளுக்காக மத்துகம பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மத்துகம பொலிஸாரால் இன்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இச்சம்பவத்தில் மத்துகம கலபடவத்த வீதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரை கைதுசெய்த வேளையில் அவரிடமிருந்து வெளிநாட்டு தயாரிப்பான ரிவோல்வர் வகை கைத்துப்பாக்கியொன்றும், அதற்கு பயன்படும் 4 துப்பாக்கி ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM