நைஜீரியாவுக்கு எதிராக செய்ன்ட் பீட்டர்ஸ்பேர்க் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற டி குழுவுக்கான மூன்றாம் கட்ட உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் கடைசி நேரத்தில் மார்க்கோஸ் ரோஜோ போட்ட அலாதியான கோலின் உதவியுடன் 2 க்கு 1 என்ற கோல் அடிப்படையில் ஆர்ஜன்டீனா இரண்டாம் சுற்றில் விளையாட தகுதிபெற்றது.
வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற நிலையில் இப் போட்டியை எதிர்கொண்ட ஆர்ஜன்டீனாவின் பின்கள வீரர் ரோஜோ, 86ஆவது நிமிடத்தில் ‘வொலி’ முறையில் போட்ட கோல் நைஜீரியர்களின் இதயங்களை சுக்குநூறாக்கியது.
போட்டியின் 14ஆவது நிமிடத்தில் அணித் தலைவர் லயனல் மெசி மிக இலாவகமாக கோல் போட்டு ஆர்ஜன்டீனாவை முன்னிலையில் இட்டார். இது சர்வதேச அரங்கில் அவர் போட்ட 100ஆவது கோலாகும். அத்துடன் முதலிரண்டு போட்டிகளில் தடுமாற்றத்துடன் விளையாடிய மெசி, இம்முறை உலகக் கிண்ணப் போட்டியில் போட்ட முதலாவது கோல் இதுவாகும்.
ஆனால், போட்டியின் 51ஆவது நிமிடத்தில் தேவையில்லாமல் நைஜீரியாவுக்கு பெனல்டி ஒன்றை ஆர்ஜன்டீன பின்கள வீரர் ஜேவியர் மாஸ்செரினோ தாரைவார்த்தார். நைஜீரிய வீரர் பெலோகனை கழுத்தில் பிடித்து மாஸ்செரினோ வீழ்த்தியதால் மத்திஸ்தர் அவருக்கு மஞ்சள் அட்டையைக் காட்டி நைஜீரியாவுக்கு பெனால்டியையும் வழங்கினார்.
இந்த பெனால்டியை மிகவும் நிதானத்துடன் கோலாக்கிய விக்டர் மோசஸ், நைஜீரியாவுக்கு இரண்டாம் சுற்றுக்கு செல்வதற்கான நம்பிக்கையைக் கொடுத்தார்.
இரண்டாம் சுற்றுக்கு செல்ல நைஜீரியாவுக்கு வெற்றிதோல்வியற்ற முடிவே தேவைப்பட்டது.
நேரம் செல்ல செல்ல முன்னாள் சம்பியன்களான ஆர்ஜன்டீனாவின் இரண்டாம் சுற்று கனவு கலைந்து போய்விடுமோ என்ற சந்தேகம் வலுக்கத் தொடங்கியது.
ஆனால் போட்டியின் 86ஆவது நிமிடத்தில் வலப்புறத்திலிருந்து பரிமாறப்பட்ட பந்தை நைஜீரிய பெனல்டி எல்லைக்குள் இருந்தவாறு மார்க்கஸ் ரோஜோ கோலினுள் புகுத்த, ஆர்ஜன்டீனா உலகக் கிண்ண்தையே வென்றுவிட்டது போன்ற உணர்வு அரங்கில் வெளிப்பட்டது.
நான்கு வருடங்களுக்கு முன்னர் பிரேஸிலில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியிலும் நைஜீரியாவுக்கு எதிராக ரோஜோ வெற்றிக் கோலை போட்டிருந்தார்.
மேலும் டியகோ மரடோனா, கேப்றியல் பட்டிஸ்டூட்டா ஆகியோரைத் தொடர்ந்து மூன்று உலகக் கிண்ண அத்தியாயங்களில் கோல் போட்ட மூனறாவது ஆர்ஜன்டீன வீரரானார் லயனல் மெசி.
(என்.வீ.ஏ.)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM