(இரோஷா வேலு)
ஐக்கிய தேசிய கட்சிக்கு தேர்தல்களை நடத்துவதில் காலம் கடத்துவது ஒவ்வொரு தேர்தலின் போதும் வெளிப்படும் ஒன்றே. இது முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவிடமிருந்தே தொடர்கின்றது என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பஷில் ராஜபக்ஷ மாகாண சபை தேர்தலை நடத்துவதில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் ஒரு கட்சியினரை தவிர ஏனைய கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தையே கொண்டுள்ளனர் என்றார்.
மாகாண சபைகள் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் அனைத்து கட்சித் தலைவர்களும் ஒருமித்த கருத்தையே கொண்டுள்ளனர். விரைவில் தேர்தல்கள் நடத்தப்படுவதே சாலச்சிறந்தது. ஆனால் தேர்தல்களை உரிய காலத்தில் நடத்துவதில் ஐக்கிய தேசிய கட்சிக்கு காலம் கடத்துவது வழமையே.
இது தொடர்பிலேயே இன்றைய கூட்டத்திலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. கூடிய விரைவில் தேர்தல்கள் பழைய முறையோ அல்லது புதிய முறைமையோ வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் மாகாண சபை தேர்தல் விரைவில் இடம்பெறுவதே முக்கியனதாகும் என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM