வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொலன்னறுவை நகரத்திற்கு அழகு சேர்க்கும் பராக்கிரம சமுத்திரத்தின் அணைக்கட்டை அண்டிய பிரதேசத்தில் நீண்ட காலமாக இருந்துவரும் குப்பை பிரச்சினை அதன் வனப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இப்பிரதேசத்தில் முறையற்ற வகையில் குப்பைகள் கொட்டப்படுவதன் காரணமாக குப்பைகள் தேங்கிக் கிடப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.
நேற்று பொலன்னறுவையில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களில் பங்குபற்றுவதற்காக அங்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது பராக்கிரம சமுத்திரத்தை அண்டிய பகுதியில் இந்த கவலைக்கிடமான நிலையினை அவதானித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து உடனடியாக அவ்விடத்திற்கு உரிய அதிகாரிகளை அழைத்த ஜனாதிபதி இந்த குப்பை பிரச்சினையை தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கையை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். குறித்த பிரதேசத்தில் உரிய முறையில் குப்பைத் தொட்டிகளை பொருத்துமாறும் முறையற்ற வகையில் குப்பைகளை வீசுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
குறித்த நடவடிக்கை குறித்து தான் தொடர்ச்சியாக தொடராய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வரலாற்று முக்கியத்துவமிக்க பராக்கிரம சமுத்திரத்தை பாதுகாத்து மக்கள் சுதந்திரமாகவும் ஆரோக்கியமான சூழலிலும் அதன் அழகினை கண்டு களிப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அதிகாரிகளுக்கு சுட்டிக் காட்டினார்.
பொசொன் மாதத்தையொட்டி நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வரலாற்று முக்கியத்துவமிக்க பொலன்னறுவை நகருக்கு வரும் மக்களுக்கு சௌகரியமான விதத்தில் அதன் சூழலை பேணி அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM