பிரதேச செயலகங்களில் நோயாளருக்கான கொடுப்பனவு மற்றும் முதியோர் கொடுப்பனவுகளைப் பெறுவோர் அவதி
தபால் ஊழியர்கள் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமையால் நோயாளருக்கான கொடுப்பனவு மற்றும் முதியோர் கொடுப்பனவு என்பவற்றைப் பெறுவதற்கு பிரதேச செயலங்களில் முதியோர்கள் அவதிப்படுவதைக் காணமுடிகிறது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் 15 ஆவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அரசாங்கத்தால் வழங்கப்படும் மாதாந்த முதியோர் உதவிப்பணம் மற்றும் நோயாளருக்கான கொடும்பனவு என்பவற்றை பெற வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முதியோர்கள் மற்றும் நோயாளர்கள் வவுனியா பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இது தொடர்பில் முதியவர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
நான் இரண்டாயிரம் ரூபாய் பணம் பெறுவதற்காக ஆயிரம் ரூபாய் செலவு செய்து காலை 8 மணிக்கு பிரதேச செயலகம் வந்தேன். அதிக மக்கள் காரணமாக மதியம் 12 மணி ஆகியும் பணத்தை பெற முடியவில்லை. தபால் ஊழியர்கள் பணிக்கு திரும்பினால் நாம் எமது தபால் நிலையத்தில் இலகுவாக பணத்தை பெற முடியும் எனது தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM