இலங்கையை சேர்ந்த தாயையும் மூன்று வயது மகளையும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் நாடு கடத்துவதை அந்நாட்டு நீதிமன்றமொன்று தடுத்து நிறுத்தியுள்ளது.
பிரியாவையும் அவரது மூன்று வயது மகளையும் நாடுகடத்துவதற்கான தடையை சமஸ்டி நீதிமன்ற நீதிபதி பேர்னார்ட் மேர்பி விதித்துள்ளார்.
பிரியா தன்னை நாடு கடத்துவதற்கு எதிராக தாக்கல் செய்த மனுநிராகரிக்கப்பட்ட நிலையில் நாடு கடத்தப்படுவதை எதிர்பார்த்திருந்தார்.இந்நிலையிலேயே நீதிபதி இந்த தடையை விதித்துள்ளார்.
பிரியாவையும் அவரது கணவர் நடேசலிங்கத்தையும் இரு பிள்ளைகளையும் அதிகாரிகள் மெல்பேர்னில் உள்ள குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்துவைத்துள்ளனர்.
அவுஸ்திரேலியா அதிகாரிகள் தங்கள் புகலிடக்கோரிக்கையை நிராகரித்தமைக்கு எதிராக இந்த குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுவை கடந்த வியாழக்கிழமை நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
பிரியாவும் நடேசலிங்கமும் 2012 2013 ம் ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவிற்கு படகுகள் மூலம் சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் மாதம் அதிகாலையில் இவர்களின் வீட்டிற்குள் நுழைந்த அதிகாரிகள் இவர்களை இழுத்துவந்து முகாமில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.
அதற்கு ஓரு வாரத்தின் பின்னர் பேர்த்திலிருந்து இலங்கை;கு அனுப்புவதற்காக அதிகாரிகள் இவர்களை விமானத்தில் ஏற்றியவேளை நீதிமன்றம் தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தியிருந்தது.
இவர்கள் கடந்த ஐந்து வருடங்களிற்கு மேலாக வசித்த பகுதியை சேர்ந்தமக்கள் பிரியா குடும்பத்திற்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை பிரியாவை நாடு கடத்துவதை நீதிமன்றம் தடுத்து நிறுத்தியுள்ள போதிலும் அவரது கணவரும் மகள் கோபிகாவும் நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்குகின்றனர் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM