மன்னார் மாவட்டத்தின் வேலையற்ற பட்டதாரிகள் இன்று மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக 5 ஆவது நாளாக மேற்கொண்ட கவனயீர்ப்பு போராட்டத்தை இன்றுடன் தற்காலிகமாக கைவிடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதங்களில் இடம்பெற்ற வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முக தேர்வுக்கு சென்ற பட்டதாரிளுக்கே இன்னமும் ஒழுங்கான பதில் நியமனங்கள் வழங்கப்படாத நிலையில் அரசாங்கத்தினால் அடுத்தகட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முக தேர்வுக்கான வர்த்தமானி அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு நடைபெற்ற நேர்முக தேர்வானது உரிய முறையில் இடம்பெறவில்லை எனவும் தெரிவித்து, பட்டதாரிகளுக்கான நியமனங்கள் புள்ளி அடிப்படையில் வழங்காது பட்டத்தின் அடிப்படையிலும் பட்டம் பெற்ற ஆண்டின் அடிப்படையிலும் நியமனங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் கடந்த வாரம் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரங்கள் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த பாரளுமன்ற அமர்வில் வேலையில்லா பட்டதாரிகள் விடயம் தொடர்பாக வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் அனைவரின் கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவருடைய கோரிக்கையின் அடிப்படையிலும் அதேபோன்று மன்னார் மாவட்ட சர்வமத அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் வேண்டுகோளினை ஏற்று குறிப்பிட்ட கவனயீர்ப்பு போரட்டத்தை இன்றுடன் கைவிடுவதாகவும் தொடர்ச்சியாக அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டால் மீண்டும் எமது போராட்டத்தை தொடருவோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM