மேற்கிந்தியத்தீவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 36 ஓவர்களுக்கு ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 99 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது.
அந்த வகையில் மேற்கிந்தியத்தீவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மேற்கிந்தியத்தீவுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.
இந்த தொடரின் முதலாவது போட்டியில் மேற்கிந்தியத்தீவு அணி வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமான தொடரின் இரண்டாவது போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.
இதனால் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையிலுள்ளது.
இந் நிலையில் கடந்த 23 ஆம் திகதி பிரிட்ஜ் டவுன், பார்படோஸில் பகலிரவு போட்டியாக ஆரம்பமான தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவு அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிராத்வைட், டேவன் ஸ்மித் ஆகியோர்
இலங்கை அணியினரின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இருவரும் விரைவில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
பிராத்வைட் 2 ஓட்டங்களுடனும் ஸ்மித் 2 ஓட்டங்களுடனும் பாவெல் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
இதனையடுத்து களமிறங்கிய ஹோப் 11 ஓட்டங்களுடனும் ரோஸ்டன்சேஸ் 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். இதன்போது அணியின் ஓட்ட எண்ணிக்கை 5 விக்கெட்டுக்கு 53 ஓட்டங்கள் என இருந்தது.
அதன்பிறகு மெதுமெதுவாக ஓட்டங்களைச் சேர்க்க 33.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 88 ஓட்டங்களை எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் இடையில் நிறுத்தப்பட்டது.
ஷேன் டாவ்ரிச் 36 ஓட்டங்களுடனும் ஜேசன் ஹோல்டர் 16 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து போட்டி ஆரம்பமாக இவ்விருவரும் நிதானமாக ஆடி ஓட்ட எண்ணிக்கையை 132 ஆக உயர்த்தப்பட முதலாம் நாள் நேரம் நிறைவுக்கு வந்தது.
இந் நிலையில் 132 ஓட்டங்களுடன் தனது இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய மேற்கிந்தியதீவு அணியின் ஷேன் டாவ்ரிச் 71 ஓடடங்களுடனும் ஜேசன் ஹோல்டர் 74 ஓட்டங்களையும் பெற்றிருந்த வேளை ஆட்டமிழந்தனர். இறுதியில் மேற்கிந்திய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 69.3 ஓவர்களில் 204 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் லஹிரு குமரா 4 விக்கெட்டுக்களையும் கசுன் ரஜிதா 3 விக்கெட்டுக்களையும் சுரங்கா லக்மல் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து இரண்டாம் நாளான நேற்று தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது இலங்கைய அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களான குசல் பெரேரா மற்றும் மஹேல உடவத்த ஆகியோர் ஏமாற்றத்தை அளித்தனர்.
குசல் பெரேரா ஓட்டம் எதுவும் பெறாது டக்கவுட் ஆனார். மஹலே உடவத்த 04 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து தனுஷ்க குணதிலக்க சற்று நிதானமாக துடுப்பெடுத்தாடி 73 பந்துகளில் 29 ஓட்டங்களையும் குசல் மெண்டீஸ் 22 ஓட்டங்களையும் தனஞ்சய டிசில்வா 8 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனையடுத்து களம் புகுந்த ரோஷானா சில்வா 3 ஒட்டங்களுடனும் நிரோசன் டிக்வெல்ல 13 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
இறுதியில் இரண்டாம் நாளான ஆட்ட நேர முடிவின் போது இலங்கை அணி மேற்கிந்தியதீவு அணியின் பந்துகளுக்கு முகங்கொடுக்க முடியாது தடுமாற்றத்துடன் 36 ஓவர்களுக்கு ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 99 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.
மேற்கிந்திய அணியின் சார்பில் கேமர் ரோச், சனோன் கேப்ரியல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் ஜோசன் ஹோல்டர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM