ஐ.தே.க.வின் சர்வாதிகார நிர்வாகமே பிரிவதற்கு காரணம் - டிலான்

Published By: Vishnu

24 Jun, 2018 | 05:59 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அனைவரும் கடந்த காலங்களில் அரசியலில் கடந்து வந்த பாதையினை யாம் அறிவோம். ஆகவே பிறர் தொடர்பில் புறம் கூறுபவர்கள் வரையறைக்குள் செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்கத்திலிருந்து விலகிய  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்களுக்கும் பாராளுமன்றத்திற்கு வர முடியாத  நிலைமை  காணப்படுகின்றது என்று அமைச்சர் மனோ கணேசன் அனுதாபம் வெளியிட்டுள்ளமை வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம். 

ஐக்கிய தேசிய கட்சியின் முறையற்ற சர்வாதிகார நிர்வாகத்தின் காரணமாக இன்று  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பலவினமடைந்துள்ளது. ஆகவே ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிர்ப்பு குழுவாக செயற்பட்டு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினை பலப்படுத்தும் பாலமாகவே 16 உறுப்பினர்களும் செயற்படுவோம்.

தேசிய அரசாங்கத்தில் தற்போது அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் முறையற்ற விதங்களில் 16 உறுப்பினர்கள் மீதும் வீண் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். குற்றஞ்சாட்டுபவர்கள் ஒரு போதும் மறந்து விடக் கூடாது 16 உறுப்பினர்களும் கடந்த மூன்று வருட காலமாக ஒன்றிணைந்து அரசாங்கத்தினை முன்னெடுத்து சென்றாவர்கள்  என்று. 

அனைவரும் கடந்த காலங்களில் அரசியலில் கடந்து வந்த பாதையினை யாமும்  அறிவோம் ஆகவே பிறர் தொடர்பில்  புறம் சொல்லுபவர்கள் வரையறைக்குள் செயற்பட வேண்டும் அதுவே அவரவர் அரசியல் இருப்பிற்கு நன்மையளிக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22