உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மெஸ்சியின் அணி தோற்ற விரக்தியில் இந்தியாவின் கேரளாவை சேர்ந்த இளைஞர் வீட்டைவிட்டு வெளியேறி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கேரள மாநிலத்தின் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த தினு அலெக்ஸ் என்ற இளைஞர் அர்ஜெண்டினா அணியின் ஆதரவாளராக இருந்தார். குறிப்பாக அந்த அணியின் தலைவர் மெஸ்சியின் தீவிர ரசிகராக இருந்தார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற போட்டியில் அர்ஜெண்டினா அணி தோல்வியடைந்தது.
இந்நிலையில் மனமுடைந்த அலெக்ஸ் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறினார். அந்த தற்கொலை கடிதத்தில் மெஸ்சி தோற்தை என்னால் தாங்க முடியவில்லை. அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து அலெக்சின் தந்தை, அலெக்ஸ் மெஸ்சியின் தீவிர ரசிகன். அவன் அணி தோல்வியடைந்ததை அடுத்து மிகவும் மனமுடைந்து காணப்பட்டான் என கூறினார். இதையடுத்து பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுனர். மோப்ப நாய் பயன்படுத்தப்பட்டது. அந்த நாய் அலெக்ஸ் வீட்டின் அருகே உள்ள ஆறுவரை சென்றது. இதனால் அவர் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என கூறப்பட்டது.
இந்நிலையில், அவரது வீட்டின் அருகே உள்ள ஆற்றில் இருந்து அலெக்சின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்டது. அவர் குதித்ததாக கூறப்படும் இடத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அவரது உடலை மீட்புப்படையினர் கண்டெடுத்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM