மட்டக்களப்பு வாழைச்சேனை நாசீவன் தீவு கிராமத்தில் உள்ள கட்டுமுறிவு பாலத்திற்கு அருகாமையிலுள்ள கண்ணமரக் காட்டுக்குள் இருந்து இனந்தெரியாத நபர் ஒருவரின் உருக்குலைந்த சடலம் ஒன்றினை இன்று சனிக்கிழமை கண்டெடுத்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
இன்று காலை மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கண்ணாமரக் காட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசுவதனை அறிந்து சடலம் ஒன்று காணப்படுவதனை கண்டு தமது பிரதேச கிராம அபிவிருத்தி சங்கத்தலைவருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சங்கத்தலைவர் கிராமசேவகருக்கு குறித்த விடயம் தொடர்பாக தவல் வழங்கியமையினையடுத்து கிராமசேவகர் இது தொடர்பாக வாழைச்சேனை பொலிசாருக்கு தகவல் வழங்கியதாக கிராம சேவகர் தெரிவித்தார்.
சடலத்தின் அருகில் கைத்தொலைபேசி ஒன்று காணப்பட்டது.உயிரிழந்தவர் நீல நிற டெணிம் காற்சட்டையும் கறுப்பு நிற ரீ சேற்றும் அணிந்திருந்தார்.உயிரிழந்தவர் யார் என்று பொதுமக்களால் அடையாளம் காணமுடியவில்லையென தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM