கொழும்பை வந்தடைந்த நோர்வேயின் நன்சன் கப்பல்  

Published By: Vishnu

23 Jun, 2018 | 03:06 PM
image

(நா.தனுஜா)

இந்து சமுத்திர கடற்பிராந்தியத்தில் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக உயர்தொழில் நுட்பங்களைக் கொண்ட நோர்வேயின் டாக்டர். பிரிட்ஜொப் நன்சன் ஆய்வுக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளது.

நோர்வேயின் பிரசித்திபெற்ற ஆய்வுக்கப்பலான டாக்டர். பிரிட்ஜொப் நன்சன் இலங்கையைச் சூழவுள்ள கடற்பிராந்தியத்தில் கடல்வள ஆய்வு, மீன்வள ஆய்வு மற்றும் கடல் மாசாக்கல் காரணிகள் தொடர்பான ஆராய்ச்சி என்பவற்றை மேற்கொள்ளும் நோக்கிலேயே இலங்கைக்கு வருகை தந்துள்ளது. இக்கப்பல் எதிர்வரும் ஜுலை மாதம் 16 ஆம் திகதி வரை இலங்கையில் தரித்து நின்று தனது கடல் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இந்த கப்பல் மேற்கொள்ளும் ஆய்வின் மூலாக இலங்கையின் கடல்வளத்தை பாதுகாத்தால், மீன்வளத்தின் நிலவுக‍ையைப் பேணுவதற்கான உத்திகள், கடல்வள மாசாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகள் என்பனவும் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

நோர்வேயின் ஆய்வுக் கப்பலை வரவேற்கும் நிகழ்வில் நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர், இலங்கைக்கான நோர்வே தூதுவர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் பல்வேறு நோர்வே பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14