சேர்பியாவுக்கு எதிராக காலினிங்க்ரட் விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற ஈ குழுவுக்கான உலகக் கிண்ண கால்பந்தாட்ட லீக் போட்டியின் 90 ஆவது நிமிடத்தில் தனிஒருவராக செயற்பட்டு ஷக்கிரி போட்ட கோலின் உதவியுடன் இரண்டாம் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை நோக்கி சுவிட்சர்லாந்து நகர்ந்துள்ளது.
ஆடுகளத்தின் மத்திய பகுதியில் பந்தைப் பெற்றுக்கொண்ட ஸ்டோக் சிட்டி கழக வீரரான ஸேர்டான் ஷக்கிரி, மிக வேகமாக பந்தை நகர்த்திச் சென்று செர்பிய கோல்காப்பாளர் விலடிமர் ஸ்டொஜ்கோவிச்சை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் கோல் போட்டார். இந்த கோல் சுவிட்சர்லாந்துக்கு 2 க்கு 1 என்ற கோல்கள் அடிப்படையிலான வெற்றியைக் கொடுத்தது.
எனினும் இந்த கோலைப் போட்ட மகிழ்ச்சியில் தனது ஜேர்சியை கழற்றிய ஷக்கிரி அநாவசியமாக மஞ்சள் அட்டைக்கு இலக்கானார்.
போட்டி ஆரம்பித்த சொற்ப நேரத்தில் இரண்டு அணியினருக்கும் கோல் போடக் கிடைத்த வாய்ப்புகள் நிறைவேறாத நிலையில் ஐந்தாவது நிமிடத்தில் சேர்பியா முதலாவதாக கோல் போட்டது. வலதுபுறத்தில் இருந்து துசான் டெடிச் பரிமாறிய பந்தை தலையால் முட்டிய அலெக்ஸாண்டர் மிட்ரோவிச் அருமையான கோல் ஒன்றைப் போட்டார்.
தொடர்ந்து இரண்டு அணியினரும் கடுமையாக மோதிக்கொள்ள, வீரர்கள் அவ்வப்போது விதிகளுக்கு முரணான ஆட்டத்திலும் ஈடுபட்டனர். இதனிடையே இரண்டு அணிகளும் கோல் போட எடுத்த முயற்சிகளும் கைகூடாமல் போயின.
இடைவேளையின்போது சேர்பியா 1 க்கு 0 என்ற கோல் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது.
இடைவேளை முடிந்து ஆட்டம் தொடர்ந்த 7ஆவது நிமிடத்தில் (52 நி.) 24 யார் தூரத்திலிருந்து சுவிட்சர்லாந்து வீரர் க்ரானிட் ஸாக்கா இடது காலால் உதைத்த பந்து மின்னல் வேகத்தில் சேர்பியாவின் கோலினுள் புகுந்தது. இது கோல் நிலையை 1 க்கு 1 என சமப்படுத்தியது.
ஆறு நிமிடங்கள் கழித்து ஷக்கிரி வலது புறத்தில் இருந்து உதைத்த பந்து செர்பியாவின் இடது கோல் கம்பத்தை உராய்ந்தவாறு வெளியில் சென்றது.
தொடர்ந்து 77ஆவது நிமிடத்தில் சேர்பியாவும் 82ஆவது, 84ஆவது, 86ஆவது நிமிடங்களில் சுவிட்சர்லாந்தும் எடுத்த கோல் போடும் முயற்சிகள் தடுக்கப்பட்டன.
போட்டி முழு நேரத்தைத் தொட்டபோது சுவிற்சர்லாந்தின் வெற்றி கோலை ஸேர்டான் ஷக்கிரி போட்டார்.
2018 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் தோல்வியின் விளிம்பிலிருந்த அணி ஒன்று மீண்டு வந்து வெற்றிபெற்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இந்தப் போட்டி முடிவுடன் இக் குழுவிலிருந்து கொஸ்டா ரிக்கா முதல் சுற்றுடன் வெளியேற்றப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM