தேசய வீடமைப்பு அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள மாதரி கிராம திட்டத்தின் கீழ் ஈவினைப் பகுதியில் 50 வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இத் திட்டத்திற்கான பயனாளிகள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளமையைத் தொடர்ந்து கட்டட வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
யாழ். மாவட்டத்தில் கடந்த வருடம் 8 மாதரிக் கிராமத்திற்கான வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. . இவ் வருடம் 32 மாதிரிக் கிராமங்களுக்கான வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்ப்டு வருகின்றது. இவ் வருடம் மேலும் 50 மாதிரிக் கிராமங்களுக்கான வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் வலி.தெற்கு பிரதேசத்தில் ஈவினைப் பகுதியில் இரு பிரிவுகளாக ஈவினை 1, ஈவினை 2 என்ற அடிப்படையில் 50 மாதிரி வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல்லை நேற்று முன்தினம் புதன்கிழமை வலி.தெற்கு பிரதேச செயலர் யாழ். மாவட்ட வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரச சபை முகாமையாளரும் இணைந்து நாட்டி வைத்தனர்.
மானிய அடிப்படையில் ஒவ்வொரு வீடும் ரூபா 5 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இவ் வீட்டுத் திட்டத்திற்கான மலசலகூட வசதியை வலி.தெற்கு பிரதேச செயலகம் அமைத்துக் கொடுக்கவுள்ளது. இவற்றிற்கான கட்டடப் பொருட்களை வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை கட்டம் கட்டமாக வழங்கவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM