மன்னார் நிருபர்
நானாட்டான் பிரதேச சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினருக்கு நானாட்டான் பிரதேசபை அமர்வின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களினால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை(22) காலை முறைப்படு செய்யப்பட்டுள்ளது.
நானாட்டான் பிரதேச சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினரான ஞானபிரகாசம் மரியசீலன் என்பவரே தனக்கு கொலை அச்சுரூத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார்.
நானாட்டான் பிரதேசசபையின் 4 ஆவது அமர்வு கடந்த 20 ஆம் திகதி புதன் கிழமை இடம் பெற்றது.
குறித்த அமர்வில் பிரதேச சபையின் தலைவர் மற்றும் உப தலைவர் ஒரு தலை பட்சமாக நடந்து கொள்வதாகவும் அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் தான்தோன்றித்தனமாக உறுப்பினர்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளிக்காது எடுக்கப்படுவதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச சபை உறுப்பினரான ஞானபிரகாசம் மரியசீலன் சபையில் தெரிவித்ததையடுத்து பிரதேச சபை அமர்வில் அமைதியின்மை ஏற்பட்டது.
தொடர்ந்தும் பேச முற்பட்ட போது கூட்டமைப்பின் உறுப்பினர்களால் இடையூறு வழங்கப்பட்டதை தொடர்து அமைதியின்மையானது கைகலப்பாகியது.
அதனை தொடர்ந்து அங்கிருந்த எனைய உறுப்பினர்களால் அமைதிக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ச்சியாக அமர்வை நடத்த முடியாமையினால் முடிவு ஏதும் இன்றி கூட்டம் முடிவுருத்தப்பட்டது.
குறித்த அமர்வு இடம் பெற்று கொண்டிருந்த நிலையில் ஊடகவியளாலர்கள் மற்றும் உறுப்பினர் அனைவருக்கும் முன்னிலையில் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் எனவே தன்னை அச்சுறுத்தியமை தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை (22) காலை மன்னார் பொலிஸ் அத்தியகட்சகர் நிலையத்திலும் முருங்கன் பொலிஸ் நிலையத்திலும் நீதி கோரி முறைப்பாடு செய்துள்ளதாக அச்சுரூத்தல்களுக்கு உள்ளான ஐக்கிய தேசியக்கட்சியின் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினரான ஞானபிரகாசம் மரியசீலன் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM