அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஏற்பட்ட நில அபகரிப்பு மற்றும் தவிசாளர் பேரின்பராஜா கைது என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது. கடந்த வாரம் முஸ்லிம்கள் சிலரால் போலி ஆவணங்களுடன் சென்று அத்துமீறி அபகரிப்பு செய்ய முற்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட கைலப்பினால் ஆலையடி வேம்பு தவிசாளர் பேரின்பராஜா அவர்கள் கைது செய்யப்பட்டமையினால் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு காணப்படுகின்றது.
இன்று பாடசாலைகளில் மாணவர்களின் வருகையும் குறைந்தளவே காணப்படுகின்றது. அரச அலுவலர்களின் வருகையும் வழமையை விட சற்று குறைந்த வீதமே தென்படுகின்றது. இந்த கொந்தளிப்பு நிலையானது தவிசாளரின் விடுதலையை நோக்கியதாகவே அமைகின்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை தவிசாளர் பேரின்பராஜாவை விசாரணைக்கென அழைத்து அக்கரைபற்று பொலிஸார் கைதுசெய்து சிறையிலடைத்தனர். இதன் பின்புலத்தில் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் இருப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பெரியகளப்பு நிலத்தை அத்துமீறி வேலியிட சென்ற ஆக்கிரமிப்பாளர்களை தடுத்து நிறுத்த சென்ற பொதுமக்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச சபை பெண் உறுப்பினர்கள் இருவரையும் செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்தது.
குறித்த பெரியகளப்பு பகுதியில் தமது காணி என முஸ்லிம் நபர் ஒருவர் களப்பு நிலத்தை கடந்த திங்கட்கிழமை அத்துமீறி வேலி அடைத்து ஆக்கிரமிக்க முற்பட்ட போது மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு நில ஆக்கிரமிப்புக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து பெரியகளப்பில் நாட்டப்பட்ட வேலிகளை பிடுங்கி எறிந்தனர், இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது
இதனைத் தொடர்ந்து நில ஆக்கிரமிப்பாளர் தனது காணியை எல்லையிட்டு வேலியடைக்க முற்பட்டபோது தம்மை தாக்கியதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் கடந்த செவ்வாய்க்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச சபையின் சுதந்திரகட்சி, ஐக்கிய தேசிய கட்சிகளைச் சேர்ந்த இரு பெண் உறுப்பினர்களை கைது செய்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், உதவி அரசாங்க அதிபர் விமலநாதன், மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட அரச உயர் அதிகாரிகளும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM