"புதிய முறைமையில் தேர்தலை நடத்த விரும்பும் ஜனாதிபதி"

Published By: Vishnu

21 Jun, 2018 | 08:06 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

மாகாண சபை தேர்தலை புதிய முறைமையின் பிரகாரம் நடத்த வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருப்பதாக அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பான முக்கியமான கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்றது. இந்த கூட்டத்தின் போதே அமைச்சர் பைஸர் முஸ்தபா மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சபை தேர்தல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய முறைமையின் பிரகாரம் நடத்த வேண்டும் என்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக உள்ளார். இதன் பிரகாரம் விரைவில் எல்லை நிர்ணய அறிக்கை விவாதத்திற்கு எடுக்கப்படும் என்றார்.

எனினும் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் புதிய முறைமையின் பிரகாரம் தேர்தல் நடத்துவது சிறுப்பான்மை இனத்தவர்களுக்கு பெரும் அநீதியாகும். சிறுப்பான்மை இன மக்களுக்கு சாதகமான தேர்தல் முறைமைக்கு ஆதரவளிப்போம். ஆகவே இந்த விவகாரத்தை இழுத்தடிப்பு செய்து தேர்தல் தாமதப்படுத்தாமல் பழைய முறைமையின் பிரகாரம் தேர்தலை உடன் நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். 

அத்துடன் புதிய முறைமையின் பிரகாரம் தேர்தலை நடத்த முடியாவிடின் பழைய முறைமையின் பிரகாரம் தேர்தலை உடன் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக்  கட்சியினரும் வலியுறுத்தினர்.

ஆகவே மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பாக இணக்கம் இல்லாத நிலைமையை அடுத்து எதிர்வரும் ஜூலை மாதம் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளையில் விவாதம் நடத்த கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த விவாதத்தின் போது அனைத்து கட்சிகளும் தமது நிலைப்பாட்டை அறிவிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10