தனித்து பயணிப்பது தமிழரின் ஒற்றுமையை சீரழிக்கும் - ரெலோ

Published By: Rajeeban

21 Jun, 2018 | 04:30 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தலின் போது தமிழ்த் தேசியத்தில் அக்கறை கொண்ட தமிழ்க் கட்சிகள்  அணியாக இணைந்து  களமிறங்க வேண்டும். தனிப்பட்ட காரணிகளுக்காக பிரிந்து நிற்பது தமிழரின் ஒற்றுமையையே சீரழித்துவிடும் என ரெலோ அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான செல்வம் அடைக்கலநாதன்  தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டத் தொகுதியில் தமிழ் ஊடகவியலாளர்களுடன்  நடைபெற்ற சந்திப்பொன்றின்போதே செல்வம் எம்.பி. இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான எமது  அறவழி போராட்டமானது இன்னும் ஓயாது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனினும்  கடந்த காலங்களை விடவும்  தற்போதைய  காலப்பகுதியானது மிக முக்கியமானதாக கருதப்படவேண்டியுள்ளது.

ஆயுதப் போராட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் ஒற்றுமையும், வாக்குரிமையுமே தமிழருக்கு எஞ்சியிருக்கும் ஆயுதங்களாகும். ஆகவே  இந்த விடயத்தில் தமிழர்கள் பிரதிநிதிகள் என்ற வகையில்  பிளவுபடாது, பிரிந்து நிற்காது தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமிழ்த் தேசியம் மீது அக்கறைகொண்ட தமிழ்க்கட்சிகள் ஓரணியில் பயணிக்கவேண்டும். 

மாறாக பல அணிகளாக பிரிந்து தேர்தலில் போட்டியிடுவதால் அது தமிழ் மக்களின் வாக்கு வங்கியை கூறுபோட்டுவிடும் என்பதுடன், தமிழர்களின் ஒற்றுமையையும் சிதைத்துவிடும். அதுமட்டுமல்ல தென்னிலங்கை கட்சிகள் தமிழர் தாயகத்தில் ஆழமாக காலூன்றுவதற்கும் அது வழிவகுத்துவிடும்.

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் நாம் நல்ல படிப்பினையை கற்றுள்ளோம். வழைமைக்கு மாறாக பிரதான கட்சிகள் தமது ஆதிக்கத்தை வடக்கு கிழக்கில் பாதிக்கும் நிலைமை உருவாகியுள்ளது.

வடக்கில் தமிழ் தலைமை ஒன்று உருவாகும் போதிலும் அவை பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றுடன் சேர்ந்து பயணிக்க வேண்டிய நிலைமையும் உருவாகும் . தமிழ் மக்களை ஆளும் கட்சிகள் சுயமாக செயற்பட முடியாது போகும். ஆகவே இந்த விடயத்தில் தமிழ்  கட்சிகளும் தாராள மனதுடன் பேச்சுகளுக்கு வந்திருந்தன. ஆகவே தேர்தல் நடைபெற்ற பின்னர் இவ்வாறு செயற்படுவதைவிட, தேர்தலுக்கு முன்னரே கரம்கோர்த்து களமிறங்கினால் அது பயனுள்ளதாக அமையும்.

தமிழ் மக்களிடையே கட்சிகளிடையே ஒற்றுமையில்லை என்ற தகவலை தெற்குக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் வழங்கிவிடக்கூடாது. அவ்வாறு வழங்கினால் அது தீர்வுக்கான முயற்சியிலும் தாக்கம் செலுத்தக்கூடும். அத்துடன், தமிழர் ஒருவர்தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக தென்னிலங்கை கட்சிகள் நிறுத்தும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முடியாது. நம்மிலிருந்து ஒருவரே வரவேண்டும், ஆளவேண்டும் அதுவே தமிழ் மக்களை பாத்துக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58